அதிமுக பொதுக்குழு வழக்கு: ஆகஸ்ட் 4-ல் விசாரணை

அதிமுக பொதுக்குழு தொடர்பாக  ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்த  வழக்கு ஆகஸ்ட் 4 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. 
ஓ.பன்னீா்செல்வம்
ஓ.பன்னீா்செல்வம்

அதிமுக பொதுக்குழு தொடர்பாக  ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்த  வழக்கு ஆகஸ்ட் 4 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. 

அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் தரப்பில், ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளதாகவும். கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், அதிமுக தரப்பில் இருந்த ஒரே ஒரு நாடளுமன்ற உறுப்பினரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். முக்கியத்துவம் வாய்ந்த இந்த பிரச்னைகளை கருத்தில் கொண்டு வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

மேலும், வழக்கை கடந்த திங்கள்கிழமை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்ற ஓபிஎஸ் தரப்பு கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

இந்நிலையில், அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பாக ஓபிஎஸ் அளித்த மனு வருகிற ஆகஸ்ட் 4 ஆம் தேதி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்னிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com