இந்தியாவின் உயர்அறிவியல் ஆய்வு நிறுவனமான சிஎஸ்ஐஆர் -இன் முதல் பெண் தலைமை இயக்குநருமான கலைச்செல்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இந்தியாவின் உயர் அறிவியல் ஆய்வு நிறுவனமான சிஎஸ்ஐஆர் -இன் முதல் பெண் தலைமை இயக்குநர் என்ற சிறப்பைத் தமிழ்நாட்டைச் சேர்ந்த நல்லதம்பி கலைச்செல்வி அடைந்திருக்கிறார். வாழ்த்துகள்!
இதையும் படிக்க | விலைவாசி உயர்வுக்கு விளக்கம் நிதியமைச்சர் அளிக்கவில்லை: ப.சிதம்பரம்
தமிழ்வழிக்கல்வி அறிவியலைக் கற்றுணரத் தடையாகாது என்பதற்குக் கலைச்செல்வியின் இந்தச் சாதனையே சிறந்த சான்று! என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.