திமுக தலைவராக பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
கடந்த 2018 ஆகஸ்ட் 28ஆம் தேதி திமுக தலைவராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், இன்று 5ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்.
இதனையொட்டி சென்னை மெரினாவிலுள்ள முன்னாள் முதல்வரும் திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, சேகர்பாபு உள்ளிட்டோரும் மரியாதை மலர் தூவி செலுத்தினர்.