டிஎன்பிஎஸ்சியின் வனத்துறை தேர்வு ஒத்திவைப்பு

மாண்டஸ் புயல் காரணமாக நாளை நடைபெறவிருந்த வனத்துறை தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
டிஎன்பிஎஸ்சியின் வனத்துறை தேர்வு ஒத்திவைப்பு

மாண்டஸ் புயல் காரணமாக நாளை நடைபெறவிருந்த வனத்துறை தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால், தமிழ்நாடு வன சார்நிலைப் பணியில் அடங்கிய வனத்தொழில் பழகுநர் (தொகுதி VI) பதவி நியமனத்திற்காக நாளை (10.12.2022) நடைபெற உள்ள தேர்வுகள் மட்டும் மாண்டஸ் புயல் காரணமாக தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுகிறது. 
இத்தேர்வுகள் நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக மாண்டஸ் புயல் காரணமாக சென்னை பல்கலை. அண்ணா பல்கலை. மற்றும் அண்ணாமலை பல்கலை. தேர்வுகளும், டிப்ளமோ தேர்வுகளும் ஒத்திவைக்ப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com