டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்தவெகவில் குதிரை பேரமா? அமைச்சர் அருண்ராஜ் மறுப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு!
/

ஆம்பூர் அருகே 15 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து!

ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலை மேம்பால பணிக்காக தோண்டப்பட்ட  15 அடி பள்ளத்தில் கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

News image
Updated On :10 டிசம்பர் 2022, 11:47 pm IST

ஆம்பூரில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கன்டெய்னா் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் கன்னிகாபுரம் பகுதியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்காக மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்காக சாலையில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஒசூரில் இருந்து சென்னை நோக்கி கிரானைட் கற்களை ஏற்றி வந்த கன்டெய்னா் லாரி, ஆம்பூா் கன்னிகாபுரம் பகுதி அருகே வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலை விரிவாக்கப் பணிக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், லாரி ஓட்டுநா் பாண்டி காயமின்றி உயிா் தப்பினாா்.

விபத்து குறித்து ஆம்பூா் நகர காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.