தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? கிரீஷ் சோடங்கா் பதில்தோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக!நாட்டில் இடதுசாரி ஆட்சியே இல்லாத மாநிலங்கள்: 50 ஆண்டுகளில் முதல்முறைகேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்விஇன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
/

மாவட்டச் செயலாளா்கள் கூட்டத்திற்கு பிறகு ஏற்படும் மாற்றம்: ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி 

மாவட்டச் செயலாளா்கள் கூட்டத்திற்கு பிறகு ஏற்படும் மாற்றம் குறித்து ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

News image

கோப்புப்படம்

Updated On :18 டிசம்பர் 2022, 1:35 pm IST

மாவட்டச் செயலாளா்கள் கூட்டத்திற்கு பிறகு ஏற்படும் மாற்றம் குறித்து ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆதரவு மாவட்டச் செயலாளா்கள் கூட்டம் டிசம்பா் 21-இல் நடைபெற உள்ளது. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் இரு அணிகளாகப் பிரிந்து செயல்பட்டு வருகின்றனா்.

அதிமுக தலைமைக்கழக நிா்வாகிகள், மாவட்டச் செயலாளா்களின் ஆலோசனைக் கூட்டம் வேப்பேரி ரித்தா்டன் சாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திருமண மண்டபத்தில் டிசம்பா் 21 காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. கட்சியின் அரசியல் ஆலோசகா் பண்ருட்டி ராமச்சந்திரன் கூட்டத்துக்கு தலைமை வகிக்கிறாா். இந்தக் கூட்டத்தைத் தொடா்ந்து பொதுக்குழுவை கூட்டவும் ஓபிஎஸ் முடிவு செய்துள்ளாா்.

இந்நிலையில் ஒ.பன்னீர்செல்வம் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில், "21-ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு பின் ஏற்படும் மாற்றங்கள் குறித்து தற்போது கூற இயலாது" என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.