11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

தமிழ்நாட்டில் புதிதாக 16 ஆயிரம் பேருக்கு கரோனா

தமிழ்நாட்டில் புதிதாக 16,096 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :1 பிப்ரவரி 2022, 2:27 pm


தமிழ்நாட்டில் புதிதாக 16,096 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கரோனா நிலவரம் குறித்த செய்திக் குறிப்பை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. 1,22,120 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 16,093 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 33,61,316 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 35 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். 25,592 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இதுவரை மொத்தம் 31,35,118 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 37,599 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி 1,88,599 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மாவட்டங்கள்:

செங்கல்பட்டு - 1,308
சென்னை - 2,348
கோவை - 1,897
திருப்பூர் - 1,297

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.