
சிவகாசியில் பிரசவத்தின்போது மருத்துவர்களின் கவனக்குறைவால் உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் இழப்பீடு வேண்டி சடலத்தை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர்.
சிவகாசியில் புதன்கிழமை பிரசவத்தின்போது பெண் ஒருவர் உயிரிழந்தார் அப்பெண்ணின் உறவினர்கள் இழப்பீடு கோரி அந்த மருத்துவமனையில் சடலத்தை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர்.
சிவகாசி சாமிபுரம் காலனியைச் சேர்ந்தவர் தங்க மாரியப்பன்(22). இவர் சொந்தமாக மினி லாரி வைத்து தொழில் செய்துவருகிறார். இவரது மனைவி காயத்ரி(21) இவர்களுக்கு திருமணமாகி ஒரு ஆண்டு ஆகிறது.
இந்நிலையில், காயத்ரி கர்ப்பமுற்று பிரசவத்திற்காக சிவகாசி வீதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 23 ஆம் தேதி சேர்க்கப்பட்டார். இதையடுத்து புதன்கிழமை அதிகாலை சுமார் 12 45 மணி அளவில் அறுவை சிகிச்சை செய்து ஆண் குழந்தையை மருத்துவர்கள் ஜியோ(63,) இவரது மகன் டேனியல்(32) இவரது மனைவி பிரசன்னா(29) ஆகியோர் எடுத்தனர்.
இதையும் படிக்க | திருவள்ளூர் குடியரசு நாள் விழா: ஆட்சியர் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை
இந்நிலையில், தொடர்ந்து அதிகாலை 2 மணிக்கு காயத்திரிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு சுமார் 2 30 மணிக்கு உயிரிழந்தார். தகவலறிந்த காயத்ரியின் உறவினர்கள் மருத்துவர்களின் கவனக்குறைவால் தான் காயத்ரி உயிரிழந்தார். எனவே ரூ.5 லட்சம் இழப்பீடு வேண்டி சடலத்தை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர்.
தகவலறிந்து சென்ற சிவகாசி காவல் துணை கண்காணிப்பாளர் பாபு பிரசாத் காவல் ஆய்வாளர் சுப குமார் ஆகியோர் காயத்ரி உறவினர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து மருத்துவர் ஜியோ ரூ. 5 லட்சம் இழப்பீடு கொடுக்க ஒப்புக் கொண்டார். பின்னர் காயத்திரியின் உறவினர்கள் சடலத்தை பெற்றுக்கொண்டனர்.
இதையடுத்து காயத்திரியின் சடலம் விருதுநகர் மருத்துவக் கல்லூரிக்கு உடற்கூறு ஆய்வுக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...