தமிழ்நாடு
போர் நினைவுச் சின்னத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை
குடியரசு தினவிழாவையொட்டி போர் நினைவுச் சின்னத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தினார்.
குடியரசு தினவிழாவையொட்டி போர் நினைவுச் சின்னத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தினார்.
சென்னை ராஜாஜி சாலையிலுள்ள போர் நினைவுச்சின்னத்தில் மலர் வளையம் வைத்து வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்.
இதனையடுத்து தேசியக்கொடியை ஏற்றுவதற்காக ஆளுநர் ரவி காமராஜர் சாலையிலுள்ள விழா நடைபெறும் இடத்திற்கு செல்லவுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் குடியரசு தினவிழாவில் பங்கேற்பார்கள். ஆனால் இந்த ஆண்டு, கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பொதுமக்கள் நேரில் வர வேண்டாம் என்று அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.