மதுரை வந்த குடியரசு தின அலங்கார ஊர்திக்கு சு.வெங்கடேசன் எம்.பி. உற்சாக வரவேற்பு அளித்தார்.
தில்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில், தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்திய விடுதலைப் போரில் தமிழகத்தின் பங்களிப்பு என்ற வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஊர்தியில் இடம்பெற்றிருந்த சுதந்திரப் போராட்ட தலைவர்கள் மற்றும் வீரர்களின் வரலாற்று பெருமையை புறக்கணிக்கும் வகையில் மத்திய அரசு நடந்து கொண்டுள்ளதாக தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு கட்சிகளும் குற்றம் சுமத்தினர்.
இதையும் படிக்க- கடைசி 50 நாள்கள்: சிபிஎஸ்இ மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்?
இதையடுத்து, விடுதலைப் போரில் தமிழகம் என்ற இந்த அலங்கார ஊர்தியை சென்னையில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, இந்த அலங்கார ஊர்தியானது கோவை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட பெருநகரங்களில் காட்சிக்கு எடுத்துச் செல்லப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி, மதுரை வந்த அலங்கார ஊர்திக்கு சு.வெங்கடேசன் எம்.பி. உற்சாக வரவேற்பு அளித்தார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில்,
இது எங்கள் தேர் !
சுதந்திரப் பெருந்தேர் !
விடுதலைப்போரினை முன்னெடுத்த மாவீரர்களை சுமந்து வரும் திருத்தேர்.
தமிழ் வலம்பிடிக்கும் தனிப்பெருந்தேரை
மாமதுரையின் சார்பில் வரவேற்று மகிழ்ந்தோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.