
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கரோனா வைரஸ் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள மு.க.ஸ்டாலின், ''இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் கரோனா உறுதிசெய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.
அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்'' எனப் பதிவிட்டுள்ளார்.
à®à®©à¯à®±à¯ à®à®à®±à¯à®à¯à®°à¯à®µà¯ à®à®±à¯à®±à¯ à®à®°à¯à®¨à¯à®¤à®¤à¯. பரிà®à¯à®¤à®¿à®¤à¯à®¤à®¤à®¿à®²à¯ #COVID19 à®à®±à¯à®¤à®¿à®à¯à®¯à¯à®¯à®ªà¯à®ªà®à¯à®à®¤à¯à®¯à®à¯à®¤à¯à®¤à¯ தனிமà¯à®ªà¯à®ªà®à¯à®¤à¯à®¤à®¿à®à¯ à®à¯à®£à¯à®à¯à®³à¯à®³à¯à®©à¯.
â M.K.Stalin (@mkstalin) July 12, 2022
à®à®©à¯à®µà®°à¯à®®à¯ à®®à¯à®à®à¯à®à®µà®à®®à¯ à®à®£à®¿à®µà®¤à¯à®à¯, தà®à¯à®ªà¯à®ªà¯à®à®¿à®à®³à¯à®à¯ à®à¯à®²à¯à®¤à¯à®¤à®¿à®à¯ à®à¯à®£à¯à®à¯, பாதà¯à®à®¾à®ªà¯à®ªà®¾à®¯à¯ à®à®°à¯à®ªà¯à®ªà¯à®®à¯.
இன்று காலை செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.75 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் மழைநீர் வடிகால் மற்றும் வெள்ளத் தடுப்புப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து மாமல்லபுரம் பூஞ்சேரியில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் விளையாட்டு அரங்கை நேரில் சென்று பார்வையிட்டார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தலைநகரான சென்னையிலும் ஆயிரத்திற்கும் அதிகமானோருக்குத் தொற்று உறுதி செய்யப்படுகிறது.
தமிழகத்தில் நேற்று மட்டும் 2,448 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. நாட்டில் 13,615 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







