100 நாள்களில் ரூ.4988 கோடி வருவாய்: பதிவுத்துறை சாதனை

நடப்பாண்டு ஏப்ரல் 1 முதல் ஜூலை 12 வரை 100 நாள்களில் ரூ.4988 கோடி வருவாய் ஈட்டி பதிவுத்துறை சாதனை படைத்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: நடப்பாண்டு ஏப்ரல் 1 முதல் ஜூலை 12 வரை 100 நாள்களில் ரூ.4988 கோடி வருவாய் ஈட்டி பதிவுத்துறை சாதனை படைத்துள்ளது.

பத்திரப்பதிவு துறையில் அமைச்சர் மூர்த்தி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் காரணமாக இதுவரை இல்லாத அளவில் பத்திரப்பதிவு துறை அதிக வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது.

2021 ஆம் ஆண்டு இதே காலக்கட்டத்தில் ரூ.2,577.43 கோடி கிடைத்த நிலையில், தற்போது ரூ.4988 கோடி வருவாய் ஈட்டி பதிவுத்துறை சாதனை படைத்துள்ளது.

சென்ற ஆண்டை விட ரூ.2,410.75 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாக வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com