சென்னை: நடப்பாண்டு ஏப்ரல் 1 முதல் ஜூலை 12 வரை 100 நாள்களில் ரூ.4988 கோடி வருவாய் ஈட்டி பதிவுத்துறை சாதனை படைத்துள்ளது.
பத்திரப்பதிவு துறையில் அமைச்சர் மூர்த்தி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் காரணமாக இதுவரை இல்லாத அளவில் பத்திரப்பதிவு துறை அதிக வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது.
இதையும் படிக்க: ஜூலை 17-ல் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம்
2021 ஆம் ஆண்டு இதே காலக்கட்டத்தில் ரூ.2,577.43 கோடி கிடைத்த நிலையில், தற்போது ரூ.4988 கோடி வருவாய் ஈட்டி பதிவுத்துறை சாதனை படைத்துள்ளது.
சென்ற ஆண்டை விட ரூ.2,410.75 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாக வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.