அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் ஜூலை 17ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் கூட்டத்தை கட்சித் தலைமை கூட்டியுள்ளது.
அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்தில், சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியிலிருந்து ஓ. பன்னீர்செல்வத்தை நீக்குவது குறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது.
இதையும் படிக்க | ராணுவ விமானத்தில் மாலத்தீவுக்குத் தப்பிச் சென்றார் கோத்தபய!
ஏற்கெனவே, பாஜக கூட்டணியின் வேட்பாளர் திரெளபதி முர்முவை நேரில் சந்தித்து அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.