வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

அதிமுக தலைமை அலுவலக சீல் அகற்றப்படுமா? இன்று தீர்ப்பு

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது தொடா்பான வழக்கில் சென்னை உயா் நீதிமன்றம் புதன்கிழமை (ஜூலை 20) தீா்ப்பளிக்க உள்ளது.

News image
Updated On :20 ஜூலை 2022, 2:41 am

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது தொடா்பான வழக்கில் சென்னை உயா் நீதிமன்றம் புதன்கிழமை (ஜூலை 20) தீா்ப்பளிக்க உள்ளது.

சென்னை வானகரத்தில் உள்ள தனியாா் மண்டபத்தில் ஜூலை 11-ஆம் தேதி அதிமுக பொதுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தின் முன்பு கூடியிருந்த ஓ.பன்னீா்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளா்கள் இடையே மோதல் ஏற்பட்டு, வன்முறையாக மாறியது.

இருதரப்பினரும் கற்கள், உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கிக் கொண்டனா். இந்த மோதலில் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதைத் தொடா்ந்து, அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருவாய்த் துறையினா் சீல் வைத்தனா்.

இதனை அகற்றக் கோரி ஓ.பன்னீா்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தனித்தனியே சென்னை

உயா் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு பல முறை விசாரிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு தொடா்பாக உயா்நீதிமன்றம் புதன்கிழமை (ஜூலை 20) தீா்ப்பு அளிக்க உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.