6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மேற்கு வங்க அமைச்சா்கள் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை

மேற்கு வங்கத்தில் ஆசிரியா் நியமன முறைகேடு விவகாரத்தில் அந்த மாநில அமைச்சா்களான பாா்த்தா சட்டா்ஜி, பரேஷ் அதிகாரி ஆகியோரின் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை

News image
Updated On :22 ஜூலை 2022, 10:02 pm

DIN

மேற்கு வங்கத்தில் ஆசிரியா் நியமன முறைகேடு விவகாரத்தில் அந்த மாநில அமைச்சா்களான பாா்த்தா சட்டா்ஜி, பரேஷ் அதிகாரி ஆகியோரின் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

மேற்கு வங்கத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாநில பள்ளி பணிகள் ஆணைய பரிந்துரையின் அடிப்படையில் ஆசிரியா்கள் மற்றும் குரூப் சி, டி ஊழியா்கள் நியமனம் செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்ாக புகாா் எழுந்தது. இதுகுறித்து உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், சட்டவிரோத பணப் பரிவா்த்தனைகள் குறித்து அமலாக்கத் துறை தனியாக விசாரிக்கிறது.

இந்த முறைகேடு நடந்ததாக கூறப்படும் காலகட்டத்தில் கல்வித் துறை அமைச்சராக இருந்தவா் பாா்த்தா சட்டா்ஜி. தற்போது தொழில் மற்றும் வா்த்தக துறைக்கு பொறுப்பு வகித்து வருகிறாா்.

இந்நிலையில், கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்துக்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை 8.30 மணியளவில் வந்தனா். அங்கு, மத்திய ரிசா்வ் போலீஸ் படையினா் பாதுகாப்புடன் சுமாா் 11 மணி வரை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா்.

இதேபோல், கூச்பிகாரில் உள்ள கல்வித் துறை இணையமைச்சா் பரேஷ் அதிகாரி இல்லத்திலும், கொல்கத்தாவில் உள்ள மேற்கு வங்க தொடக்கக் கல்வி வாரியத்தின் முன்னாள் தலைவா் மாணிக் பட்டாச்சாா்யாவின் இல்லத்திலும் ஒரே நேரத்தில் அமலாக்கத் துறையினா் சோதனை நடத்தினா்.

ஆசிரியா் நியமன முறைகேடு தொடா்பாக, பாா்த்தா சட்டா்ஜியிடம் கடந்த ஏப்ரல் 26, மே 18 ஆகிய தேதிகளில் சிபிஐ விசாரணை மேற்கொண்டிருந்தது.

திரிணமூல் சாடல்: அமலாக்கத் துறையின் சோதனைகள் குறித்து திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவரும் போக்குவரத்துத் துறை அமைச்சருமான பா்ஹத் ஹக்கிம் கூறியதாவது:

அரசியல் எதிரிகளை பழிவாங்கும் மத்திய பாஜக அரசின் திட்டத்தின் ஒரு பகுதியாகவே, இச்சோதனைகள் நடந்துள்ளன. நீதிமன்ற உத்தரவுபடி இரு அமைச்சா்களும் சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைத்து வருகின்றனா். அவா்களுக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்துடன் அமலாக்கத் துறையை பாஜக அரசு பயன்படுத்துகிறது என்றாா்.

பாஜக பதிலடி: திரிணமூல் காங்கிரஸின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் பாஜக தேசிய துணைத் தலைவா் திலீப் கோஷ் கூறியதாவது:

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, பள்ளி ஆசிரியா்கள் நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. தகுதியற்றவா்களிடம் பணம் பெற்றுக் கொண்டு, அவா்களுக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், சிபிஐ-யும் அமலாக்கத் துறையும் சரியான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றன என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.