திருச்சி துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜித் பங்கேற்பு!

திருச்சியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் திரைப்பட நடிகர் அஜித் பங்கேற்றார்.
திருச்சி துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்ற நடிகர் அஜித்.
திருச்சி துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்ற நடிகர் அஜித்.


திருச்சி: திருச்சியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் திரைப்பட நடிகர் அஜித் பங்கேற்றார்.

திருச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் ரைபிள் கிளப் அமைந்துள்ளது. இதில், 47 ஆவது மாநில துப்பாக்கி சுடும் போட்டிகள் நடைபெற்று வருகிறது. கடந்த 24 ஆம் தேதி தொடங்கிய இப் போட்டிகள் தொடர்ந்து ஜூலை 31 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 1,200 பேர் பங்கேற்றுள்ளனர். 

10 மீட்டர், 25 மீட்டர், 50 மீட்டர் அளவில் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் 16,19,21, மற்றும் 21 - 45, 45-60 வயதினருக்கான பிரிவின் கீழ் போட்டியாளர்கள பங்கேற்கின்றனர்.

இந்த போட்டியில் திரைப்பட நடிகர் அஜித் கலந்து கொண்டார். இதில் பங்கேற்க கார் மூலம் புதன்கிழமை காலை திருச்சி வந்தார். முதலாவதாக சீனியர் மாஸ்டர் பிரிவில் பங்கேற்ற அவர்,தொடர்ந்து 4 பிரிவிகளிலும் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்கிறார். 

அஜித் வருகையை முன்னிட்டு ரைபிள் கிளப்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கிளப்புக்கு வெளியே பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த ரசிகர்கள் ஆராவாரம் எழுப்பியபடி அவரைக் காண காத்திருகின்றனர். 

போட்டியினுடைய துப்பாக்கி சுடும் தளத்திலிருந்து மேலாளர் அறைக்கு அவர் வந்தபோது வெளியே காத்திருந்த ரசிகர்கள் அவரைக் காணும் ஆவலில் கிளப் உள்ளே நுழைய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதில் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னறிவிப்பு ஏதுமின்றி அஜித் திருச்சி வந்திருப்பது அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com