தமிழகத்தில் அதிகரித்து வரும் கரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால், தொற்றை கட்டுப்படுத்த ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்கள், மருத்துவ அதிகாரிகளுக்கு ஜெ.ராதாகிருஷ்ணன் மீண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன் போதிய அளவில் இருப்பு வைத்திருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.