அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடைவிதிக்க மறுத்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது.
மேல்முறையீட்டு மனுவை ஏற்று இன்னும் சற்று நேரத்தில் நீதிபதி துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு விசாரிக்க உள்ளது. நீதிபதி துரைசாமி வீட்டில் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நடைபெற உள்ளது.
அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை என நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி உத்தரவிட்ட நிலையில் தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.