/

அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு

அதிமுகவின் அவைத்தலைவராக தமிழ்மகன் உசேனை தேர்வு செய்து பொதுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

News image
Updated On :23 ஜூன் 2022, 5:33 pm IST

அதிமுகவின் அவைத்தலைவராக தமிழ்மகன் உசேனை தேர்வு செய்து பொதுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் வியாழக்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. அதிமுகவில் எழுந்துள்ள ஒற்றைத் தலைமை சர்ச்சைகளுக்கு மத்தியில் அனைத்து தீர்மானங்களையும் நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி அறிவித்தார். அதனைத் தொடர்ந்து அதிமுகவின் அவைத்தலைவருக்கான தேர்வு நடைபெற்றது.

இதில் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிச்சாமி தமிழ் மகன் உசேனை அவைத்தலைவராக்க தீர்மானம் கொண்டு வந்தார். இதனை திண்டுக்கல் சீனிவாசன் முன்மொழிய ஜெயக்குமார் வழிமொழிந்தார். இதற்கு பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவளித்த நிலையில் அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.