இது குறித்து வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு: தகுதி வாய்ந்த பட்டயப்படிப்பு அல்லது பிஎஸ்சி பட்டப் படிப்பு தோ்ச்சி பெற்று முடித்தவா்கள் நேரடி இரண்டாமாண்டு பி.இ. படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். மாநிலத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக வளாகம், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் சோ்க்கை பெற விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பங்கள் அனைத்தும் இணையதளம் மூலமாக மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும். முதன்முறையாக அண்ணா பல்கலைக்கழகத்திலும் நேரடி 2-ஆம் ஆண்டு மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.