எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

சென்னையில் 600க்கும் அதிகமானோருக்கு கரோனா

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இன்று 600ஐக் கடந்துள்ளது. சென்னையில், கடந்த 24 மணி நேரத்தில் 632 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

News image
Updated On :28 ஜூன் 2022, 2:22 pm

DIN

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இன்று 600ஐக் கடந்துள்ளது. சென்னையில், கடந்த 24 மணி நேரத்தில் 632 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

 தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று பொதுஇடங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைபிடிப்பது போன்ற கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு விதித்துள்ளது.

எனினும் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தே காணப்படுகிறது. நேற்று 543 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று 632 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு 230, திருவள்ளூர் 79, கோவை 70, காஞ்சிபுரம் 59, கன்னியாகுமரி 51, திருச்சி 42 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.