புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு இல்லை

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 151 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இன்று 11 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை.

News image

கோப்புப் படம்

Updated On :8 மார்ச் 2022, 3:20 pm

DIN

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 151 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இன்று 11 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை.

தமிழகத்தில் 40,884 பேருக்கு இன்று கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 151 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 51 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கு அடுத்தபடியாக கோவையில் 18, செங்கல்பட்டில் 16, வேலூரில் 8, திருவள்ளூர், திருச்சி, நீலகிரியில் தலா 7 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அரியலூரில், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, தென்காசி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை என்று சுகாதாரத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

அதிகபட்சமாக சென்னையில் 51 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு 7,50,518 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.