நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

மேக்கேதாட்டு அணை விவகாரம்: தமிழ்நாடு பேரவையில் இன்று தீர்மானம்

மேக்கேதாட்டு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தனித் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. 

News image
Updated On :21 மார்ச் 2022, 9:04 am IST

மேக்கேதாட்டு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தனித் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2022-2023-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை கடந்த 18ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இதனை தாக்கல் செய்தார். அதனைத்தொடர்ந்து 19ஆம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கையை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.  

இந்த நிலையில் பேரவையில் இன்று முதல் 3 நாள்களுக்கு நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் தொடங்குகிறது. முதல் நாளான இன்று காலை 10 மணிக்கு பேரவைக் கூட்டம் தொடங்கியதும், முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து கேள்வி நேரம் நடைபெறுகிறது. கேள்வி நேரம் முடிந்ததும், பொது மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் தொடங்குகிறது. 

இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுகின்றனர். இதில் பல்வேறு முக்கியப் பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சி உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளனர். இதனால் அவையில் காரசார விவாதம் நடைபெறலாம் எனக் கூறப்படுகிறது. நாளையும், நாளை மறுநாளும் நிதிநிலை மீதான விவாதம் தொடர்கிறது. 

இந்த நிலையில் மேக்கேதாட்டு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தனித் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இத்தீர்மானத்தை பேரவையில் இன்று முன்ழொழிகிறார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.