ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
/

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்

தமிழகம், புதுச்சேரியில் மாநிலப் பாடத் திட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு 3,936 மையங்களில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. 

News image
Updated On :6 மே 2022, 4:05 am

DIN


சென்னை: தமிழகம், புதுச்சேரியில் மாநிலப் பாடத் திட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு 3,936 மையங்களில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

இந்தத் தேர்வை 9 லட்சத்து 55,139 மாணவ மாணவிகள் எழுதுகின்றனர். இதில் 7,470 மாற்றுத் திறனாளி தேர்வர்களுக்கும், 242 சிறைவாசிகளும் அடங்குவர். சென்னையில் 46,932 மாணவ, மாணவிகள் 217 மையங்களில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதவுள்ளனர். காலை 10 மணிக்குத் தொடங்கும் தேர்வு பகல் 1.15 மணிக்கு நிறைவடையும்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கு 308 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களும் பாதுகாப்பான இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. அவ்விடங்களில் 24 மணி நேர ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முதல் தேர்வாக மொழிப் பாடங்களுக்கான தேர்வுகள் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளன. இந்தத் தேர்வு மே 30-ஆம் தேதி நிறைவடையவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.