பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

பாஜக மாநில நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு

தமிழ்நாடு பாஜக மாநில நிர்வாகிகள், அணிகள், பிரிவுகளின் தலைவர்கள் பட்டியலை அதன் தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்டார். 

கோப்புப்படம்

Published On :6 பிப்ரவரி 2024, 6:15 pm IST

தமிழ்நாடு பாஜக மாநில நிர்வாகிகள், அணிகள், பிரிவுகளின் தலைவர்கள் பட்டியலை அதன் தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்டார். 

அதில், மாநில துணைத் தலைவரான நயினார் நாகேந்திரனுக்கு சட்டமன்றக் குழு தலைவர் பொறுப்பு மட்டும ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாஜக மாநில துணைத்தலைவர்களாக நாராயணன் திருப்பதி, கே.எஸ்.நரேந்திரன், ஏ.ஜி.சம்பத், பால் கனகராஜூம், பாஜக மாநில செயலாளர்களாக கராத்தே தியாகராஜன், வினோஜ் பி.செல்வம் உள்ளிட்டோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அதேசமயம் பாஜக மாநில மகளிர் அணி தலைவராக உமாரதி, இளைஞரணி தலைவராக ரமேஷ்சிவா நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் மாநில மீனவர் பிரிவு தலைவராக எம்.சி.முனுசாமியும், கலை, கலாசார பிரிவு தலைவராக பெப்சி ஜி.சிவக்குமாரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சமூல ஊடக பிரிவு தலைவராக சி.டி.ஆர்.நிர்மல்குமாரையும், ஊடக பிரிவு தலைவராக ரெங்கநாயகலுவையும் நியமித்து உத்தரவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.