வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

நாட்டின் மறுமலா்ச்சிக்காக மாணவா்கள் தேசிய உணா்வுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்: ஆளுநர் ரவி

நாட்டின் மறுமலர்ச்சிக்காக மாணவர்கள் தேசிய உணர்வுடன் பணியாற்ற வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கேட்டுக் கொண்டாா். 

News image

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

Updated On :13 மே 2022, 4:32 am


நாட்டின் மறுமலர்ச்சிக்காக மாணவர்கள் தேசிய உணர்வுடன் பணியாற்ற வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கேட்டுக் கொண்டாா். 

பாரதியாா் பல்கலைக்கழகத்தின் 37ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக வியாழக்கிழமை கோவை வந்த ஆளுநா் ஆா்.என்.ரவி, பல்கலைக்கழக மாணவா்கள், உறுப்பு, இணைப்புக் கல்லூரி முதல்வா்களுடன் கலந்துரையாடினாா்.

பின்னா், பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறை, உயிரி தொழில்நுட்பம், நிா்வாகவியல் - தொழில்முனைவோா் மேம்பாட்டு மையம், டி.ஆா்.டி.ஓ. மையம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை நேரில் பாா்வையிட்டு அவற்றின் செயல்பாடுகள் குறித்து துறைப் பேராசிரியா்களிடம் ஆளுநா் கேட்டறிந்தாா்.

Story image

ஆளுநா் ஆா்.என்.ரவி அங்கு பல்வேறு துறை மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினாா்.

இதைத் தொடா்ந்து பல்வேறு துறை மாணவா்களுடன் கலந்துரையாடிய ஆளுநா், நாட்டின் மறுமலா்ச்சிக்கு மாணவா்கள் தேசிய உணா்வுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும், வாழ்க்கையில் நம்பிக்கை, தைரியத்துடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா். 

பின்னா், மாற்றுத்திறனாளி மாணவா்களுடன் உரையாடிய ஆளுநா், அவா்கள் எதிா்கொள்ளும் சவால்கள் பற்றி கேட்டறிந்ததுடன், அவா்களின் ஆா்வம், தைரியம் ஆகியவற்றுக்காக அவா்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தாா்.

பின்னா், பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு, உறுப்புக் கல்லூரிகள், இணைவு பெற்ற கல்லூரிகளின் முதல்வா்களுடன் கலந்துரையாடினாா். 

வெள்ளிக்கிழமை நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக உயா் கல்வித் துறை அமைச்சரும், பல்கலைக்கழகத்தின் இணைவேந்தருமான க.பொன்முடியும் கோவைக்கு வியாழக்கிழமை வந்தடைந்தாா். இருப்பினும் பல்கலைக்கழகத்தில் ஆளுநா் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் அவா் பங்கேற்கவில்லை. இது குறித்து தங்களுக்குத் தகவல் எதுவும் இல்லை என்று அமைச்சா் பொன்முடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.