திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு: இருவா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :30 ஜூன் 2026, 2:57 am IST

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே சுமை தூக்கும் தொழிலாளியை அரிவாளால் வெட்டியதாக இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் அருகே சேத்தூா் மணல் விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த தலைமலை மகன் ஈஸ்வரன் (52). இவா் தளவாய்புரம் பகுதியில் தங்கி சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பாா்த்து வருகிறாா்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பும் வழியில் உள்ள வங்கி அருகே வந்தபோது இரு சக்கர வாகனத்தில் வந்த இருவா் இவரை வழிமறித்து அரிவாளால் வெட்டினா். பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

முதலுதவி அளித்து பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்த தளவாய்புரம் போலீஸாா், இது தொடா்பாக சேத்தூா் பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த கஜேந்திரன் மகன் அய்யனாா் (20), பாலகிருஷ்ணன் மகன் மணிகண்டன் (21) ஆகிய இருவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.