கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

தொடர் மழையால் நிரம்பியது மோர்தானா அணை: விவசாயிகள் மகிழ்ச்சி

தமிழக - ஆந்திர எல்லையோரம் தமிழக பகுதியில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே அமைந்துள்ள மோர்தானா அணை வேலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய அணையாகும்.

தொடர் மழையால் நிரம்பியது மோர்தானா அணை: விவசாயிகள் மகிழ்ச்சி

Published On :

தமிழக - ஆந்திர எல்லையோரம் தமிழக பகுதியில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே அமைந்துள்ள மோர்தானா அணை வேலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய அணையாகும்.

இந்த அணை 11.50 மீட்டர் உயரமும் 261  மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட  இந்த அணை தற்போது ஆந்திர - தமிழக எல்லையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாகவும் மோர்தானா அணைக்கு நீர் ஆதாரமாக உள்ள ஆந்திர மாநிலம் பலமனேர், புங்கனூர் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பெய்த தொடர் மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணை வேகமாக நிரம்பியது.

Story image

இதனிடையே இன்று காலை மோர்தானா அணை தனது முழு கொள்ளளவை எட்டி அணை முழுவதும் நிரம்பியது. மேலும் தற்போது 31  கன அடி நீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. மேலும் உபரி நீராக 31 கன அடி தண்ணீர் அணையில் இருந்து உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. மோர்தானா அணை நிரம்பியதால் குடியாத்தம் கே.வி.குப்பம் பகுதிகளில் உள்ள  பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.