லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

சிறுமியை காதலிக்க சொல்லி தொந்தரவு: இளைஞர்கள் 2 பேர் போஸ்கோ சட்டத்தில் கைது

சிறுமியை காதலிக்க சொல்லி தொந்தரவு செய்ததாக அருண்குமார் அவரது நண்பர் பாலா ஆகிய இருவரையும் போஸ்கோ சட்டத்தின்கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.

News image
போஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள அருண்குமார் அவரது நண்பர் பாலா
Updated On :26 மே 2022, 6:30 am

DIN

சிறுமியை காதலிக்க சொல்லி தொந்தரவு செய்ததாக அருண்குமார் அவரது நண்பர் பாலா ஆகிய இருவரையும் போஸ்கோ சட்டத்தின்கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள நரசிங்கம்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிளஸ் 1 படிக்கும் மாணவியை, அதே பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் ஒரு தலைபட்சமாக காதலித்து வந்துள்ளார். அதற்கு அவரது நண்பர் பாலா உதவி செய்துள்ளார். இவர்கள் இருவரும் அந்த சிறுமியிடம் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. 

இதனையடுத்து இதுகுறித்து அந்த சிறுமி தனது தாயர் ராதாவிடம் தெரிவிக்கவே, ராதா கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

சிறுமியின் தயார் அளித்த புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து, அருண் குமார் மற்றும் பாலா இரண்டு பேரையும் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.