தமிழகத்தில் மே 4 ஆம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
தமிழகத்தில் மே மாத தொடக்கத்திலேயே கோடை வெயில் வாட்டி வந்தது. அந்தவகையில் கடந்த மே 4 ஆம் தேதி அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் தொடங்கியது. கோடை வெயில் இருந்து வந்தாலும் ஒரு சில மாவட்டஙக்ளில் அவ்வப்போது கோடை மழை பெய்தது மக்களை மகிழ்ச்சியடையச் செய்தது. எனினும் கடந்த சில தினங்களாக கோடை வெயில் அதிகமாக இருக்கிறது.
இந்நிலையில், தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிவடைகிறது. இதனால் கோடை வெயிலின் தாக்கம் குறையும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் அதிகபட்சமாக கடந்த மே 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் 104 டிகிரி வெப்பம் பதிவானது குறிப்பிடத்தக்கது.