பெட்ரோல், டீசல் விலையை தமிழக அரசு குறைக்க வலியுறுத்தி பாஜக தலைவா் கே.அண்ணாமலை தலைமையில் செவ்வாய்க்கிழமை பேரணி நடைபெற உள்ளது.
பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு இரண்டு முறை குறைத்த நிலையில் தமிழக அரசு குறைக்கவில்லை என்று அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தாா். அதைக் கண்டித்தும் விலையைக் குறைக்க வலியுறுத்தியும் கோட்டையை நோக்கி பேரணி நடைபெறும் என்று அறிவித்திருந்தாா்.
அதன்படி கே.அண்ணாமலை தலைமையில் எழும்பூா் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் கோட்டையை நோக்கி பேரணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.