வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(நவ.1) அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வரின் முகாம் அலுவலகத்தில் காணொலி காட்சி வாயிலாக இன்று காலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
வடகிழக்கு பருவமழை கடந்த 29ஆம் தேதி தொடங்கியுள்ள நிலையில், இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது.
இதையும் படிக்க: சென்னை, புறநகர்ப் பகுதிகளில் மீண்டும் வேகமெடுக்கிறது பலத்த மழை
இந்நிலையில், கனமழையையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.