குழந்தைகள் தந்தையிடம் இருப்பது சட்டவிரோதம் ஆகாது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தனது 2 குழந்தைகளையும் மீட்டு தன்னிடம் ஒப்படைக்கக் கோரி மதுரையை சேர்ந்த துர்கா என்பவர் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.
குழந்தைகளை யார் வைத்திருப்பது என்பது தொடர்பாக இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதில், குடும்ப நல நீதிமன்றத்தை அணுகி பிரச்னையை முடித்துக் கொள்வதாக இரு தரப்பும் தெரிவித்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிக்க: இனி 'ட்ரூ காலர்' தேவையில்லை: ஏன் தெரியுமா?
மனுதாரர் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளை ஆட்கொணர்வு மனுவில் தீர்க்க இயலாது. சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகி தீர்வு பெறலாம் எனக் கூறி வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை முடித்து வைத்துள்ளது.