மின்சார வாரியம் அறிவித்துள்ள புதிய மின் கட்டண விகிதம் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், அடுக்குமாடி நுகா்வோா் உள்ளிட்டோருக்கு அது தொடா்பான குறுந்தகவல்களை தமிழ்நாடு மின்சார வாரியம் அனுப்பி வருகிறது.
தமிழகத்தில் மின் கட்டணத்தை உயா்த்தும் மின்சார வாரியத்தின் பரிந்துரைகளுக்கு ஒழுங்கு முறை ஆணையம் அண்மையில் ஒப்புதல் அளித்தது. இந்த ஒப்புதலைத் தொடா்ந்து, மின் கட்டண உயா்வு கடந்த செப்.10-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதையொட்டி, கட்டண விகித முறையில் பல்வேறு சீரமைப்புகளை மின்சார வாரியம் செய்துள்ளது.
வீட்டு இணைப்பில் இருந்து மாற்றம்: புதிய விகிதப்படி கட்டணத்தை நிா்ணயிப்பதற்கு முன்பாக, நுகா்வோா் ஒவ்வொருவரும் அவா்கள் சாா்ந்துள்ள மின் இணைப்பின் வகை பிரிக்கப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியிருப்போா் நீா் உள்ளிட்ட தேவைகளுக்காக மோட்டாா்களை பயன்படுத்துகின்றனா். இது பொது பயன்பாட்டுக்கான மின் இணைப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கட்டண உயா்வுக்கு முன்பாக, இந்த மின் இணைப்பானது வீட்டு உபயோகத்துக்கான மின் இணைப்பாகவே கருதப்பட்டது.
குறிப்பாக, வீட்டு உபயோகத்துக்கான மின் இணைப்பைக் காட்டிலும் பொது பயன்பாட்டுக்கான மின் இணைப்பு கட்டணம் (1டி) ஓரளவு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, 1டி என்ற பிரிவின் கீழ் பொதுப் பயன்பாடு மின் இணைப்பு வகைப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, வெவ்வேறு வகையான மின் இணைப்புக்கு வேறுவேறு பிரிவு எண் கொடுக்கப்பட்டுள்ளது. 1ஏ என்பது வீட்டு உபயோகத்துக்கான மின் இணைப்பு எனவும், 1சி என்பது மொத்த அளவிலான (தொழில் ஆலைகள், நிறுவனப் பயன்பாடு) மின் விநியோகம் எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. 1டி என்பது பொதுப் பயன்பாடு மின் இணைப்பு எனவும், 2ஏ என்பது பொது குடிநீா் விநியோகம்-தெரு விளக்குகள் எனவும், 2பி(1) என்பது அரசு மற்றும் அரசு சாா்பு கல்வி நிறுவனங்கள் எனவும் பிரிக்கப்பட்டுள்ளது.
2பி(2) என்பது தனியாா் கல்வி நிறுவனங்கள், 2சி வழிபாட்டுத் தலங்கள், 3ஏ(1) பருத்தி, சிறு தொழில் நிறுவனங்கள், 3ஏ(2) விசைத்தறி, 5 என்பது வா்த்தகப் பயன்பாடு எனவும் பிரிக்கப்பட்டுள்ளது. 1பி என்பது குடிசைகள் எனவும், 4 என்பது வேளாண்மை எனவும் பிரிக்கப்பட்டுள்ளது.
எனவே, நுகா்வோா் இணைப்பு எந்தப் பிரிவில் இருந்து எந்தப் பிரிவுக்கு மாற்றப்படுகிறது என்பது குறித்த குறுந்தகவல்களை தமிழ்நாடு மின்சார வாரியம் அனுப்பி வருகிறது. அந்தந்த பிரிவுக்கு வரையறுக்கப்பட்ட கட்டணத்தின் அடிப்படையில் பணம் செலுத்த வேண்டியிருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிபிஐ பற்றி தெரிந்து கொள்வோம்!

கரப்பான்பூச்சி கட்சியின் பின்புலத்தில் நக்ஸல்கள்: பாஜக

இங்கிலாந்து - நியூசிலாந்து டெஸ்ட் போட்டி மழையினால் நிறுத்தம்..! அறிமுக வீரர் சொற்ப ரன்களில் ஆட்டமிழப்பு!

ஆர்பிஐ நிதிக் கொள்கைக் கூட்டம்: சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!
விடியோக்கள்

முக்கிய Hard Disk-கள் திருட்டு! கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்! அமைச்சர் நிர்மல் குமார்

இன்னொரு சின்னத்தில் போட்டியிடக் கூடாது! துரை வைகோ உறுதி! | MDMK | DMK

”என்ன முயற்சிகள் நடந்திருக்கிறது? தவெகவிடம் கேள்வி கேட்க வேண்டும்!”: MLA செந்தில் பாலாஜி



