கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

திருவாரூர் கோயிலுக்குச் சொந்தமான 2 சிலைகள் அமெரிக்க அருங்காட்சியகத்தில்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கோயில்களிலிருந்து 50 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட இரண்டு சுவாமி சிலைகள் அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்பிலிருந்து...

Updated On :12 அக்டோபர் 2022, 11:55 am

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கோயில்களிலிருந்து 50 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட இரண்டு சுவாமி சிலைகள் அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் ஆலத்தூரில் உள்ள வேணுகோபால சுவாமி கோயிலுக்குச் சொந்தமான யோகநரசிம்மர் மற்றும் கணபதி சிலைகள் அமெரிக்காவில் நெல்சன் - அட்கின்ஸ் அருங்காட்சியகத்தில் இருப்பதை தமிழ்நாடு சிலை திருட்டு தடுப்புப் பிரிவு சிஐடி காவலர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த சிலைகள் திருடப்பட்டு 50 ஆண்டுகளுக்கும் மேல் இருக்கலாம் என்றும், சிலைகள் திருடப்பட்டு, அதற்கு பதிலாக அதேப்போன் போலியான சிலைகள் கோயிலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

2017ஆம் ஆண்டு வேணுகோபால் சுவாமி கோயிலில் நடந்த சிலை திருட்டு தொடர்பாக காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரை சிலை திருட்டு தடுப்புப் பிரிவு சிஐடி காவல்துறையினர் விசாரணைக்கு எடுத்தனர்.

இந்த புகாரில் கூறப்பட்ட விஷ்ணு, ஸ்ரீதேவி, பூதேவி சிலைகள் லாஸ் ஏஞ்ஜெல்ஸ் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்த நிலையில், திருவாரூர் சிலைகள் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டிருந்த கோயிலுக்குச் சொந்தமான சிலைகள் போலியானவை என்று கண்டறியப்பட்டது.

இதையடுத்தே, கோயிலுக்குச் சொந்தமான பழமையான யோக நரசிம்மர் மற்றும் கணபதி சிலைகள் அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கோயிலுக்குச் சொந்தமான சிலைகளை மீட்பதற்கான முயற்சிகளில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.