கோப்புப்படம்
கோப்புப்படம்

வருவாய்த்துறை பொறுப்பில் தேவர் தங்கக்கவசம்!

ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியரிடம் தேவர் தங்கக் கவசத்தை ஒப்படைக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
Published on

ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியரிடம் தேவர் தங்கக் கவசத்தை ஒப்படைக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

அதிமுக உள்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

தேவர் தங்கக் கவசத்தை தங்களிடம் வழங்கவேண்டும் என்ற இ.பி.எஸ், ஓ.பி.எஸ் தரப்பு கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

அதிமுக சார்பில் வழங்கிய தங்கக் கவசத்தை ராமநாதபுரம் டி.ஆர்.ஓ. வங்கியில் இருந்து எடுத்துச் சென்று அணிவிக்க வேண்டும். மேலும் தங்கக் கவசம் அணிவிக்கப்பட்ட பின் மீண்டும் வங்கியில் ஒப்படைக்கவும் ராமநாதபுரம் டி.ஆர்.ஓ.வுக்கு அதிகாரம் வழங்கி  நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. 

ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அதிகாரி, தேவர் நினைவிட பொறுப்பாளர் இணைந்து கவசத்தை பெற்றுக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தங்கக் கவசத்திற்கு ராமநாதபுரம் காவல்துறையினர் தகுந்த பாதுகாப்பு வழங்கவும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மேலும். இந்த ஆண்டுக்கு மட்டுமே உத்தரவு வழங்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com