புதுக்கோட்டை அழகர் நகரில் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் கோபிநாத் வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
கோவையில் உள்ள தனது மகள் வீட்டுக்கு காவல் ஆய்வாளர் கோபிநாத் சென்ற நிலையில் கொள்ளையர்கள் பூட்டை உடைத்து கைவரிசையை காட்டியுள்ளனர்.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.