மின் விளக்குகளால் ஒளிரும் வேலூர் கோட்டையை ஆர்வமுடன் புகைப்படம் எடுத்து மகிழும் பொது மக்கள்.
வேலூர் மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது வரலாற்று சிறப்பு மிக்க வேலூர் கோட்டை. சுற்றிலும் அழகிய அகழியுடன் உள்ள இக்கோட்டையில் 1806 ம் ஆண்டு நடைபெற்ற வேலூர் சிப்பாய் புரட்சிதான் இந்திய விடுதலை போராட்டங்களுக்கு வித்திட்ட முதல் புரட்சி ஆகும்.
இந்நிலையில் வேலூர் மாநகராட்சி பொலிவுறு நகராக (ஸ்மார்ட் சிட்டி) தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. அதில் வேலூர் கோட்டையை மேம்படுத்துவதும் அடங்கும். 133 ஏக்கரில் 191 அடி அகலமும், 29 அடி ஆழமும் கொண்ட இக்கோட்டையை சுற்றி மின் விளக்குகள் பொறுத்தப்பட்டுள்ளது. அது நேற்று முதல் இரவில் ஒளிரச்செய்யப்பட்டுள்ளது. மின் விளக்குகளால் வேலூர் கோட்டை மின்னுவதோடு இரவிலும் தனது கம்பீரத்தை நிலைநாட்டி வருகிறது. அகழியில் தேங்கியிருக்கும் நீரில் பிரதிபலிக்கும் கோட்டை பிம்பம் மேலும் அழகு சேர்க்கிறது, பார்போரை வியக்கும் வண்ணம் அமைந்துள்ளது இது. இரவில் மின் விளக்கில் ஒளிரும் வேலூர் கோட்டை மக்கள் ஆர்வமுடன் பார்ப்பதோடு புகைபடங்களையும் எடுத்துச்செல்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எம்.ஜி.ஆருக்குப் பின்... காவிரிக்காக பெங்களூரு செல்லும் விஜய்!

தூங்கிக் கொண்டிருப்பது யார்? திமுகவுக்கு தவெக பதிலடி
விவோ டி5எக்ஸ் ஃப்யூசன் ரெட் அறிமுகம்... என்னென்ன எதிர்பார்க்கலாம்?

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா: நீச்சல் உடையில் அசத்திய இறுதிப் போட்டியாளர்கள்!
விடியோக்கள்

2 கோடி கேட்டு நோட்டீஸ்,அதிர்ச்சி அடைந்த பெண் தொழிலாளி | GST NOTICE | Tirupathur | Woman daily-wager



