மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பொங்கல்: தெற்கு ரயில்களில் சில நிமிடங்களிலேயே விற்றுத்தீர்ந்த ரயில் டிக்கெட்டுகள்!

பொங்கல் திருநாளுக்குச் செல்வதற்கான ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு இன்று (செப். 15) தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்து, காத்திருப்பு பட்டியலுக்கு வந்துவிட்டது.

News image
Updated On :15 செப்டம்பர் 2022, 7:52 am

DIN

பொங்கல் திருநாளுக்குச் செல்வதற்கான ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு இன்று (செப். 15) தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்து, காத்திருப்பு பட்டியலுக்கு வந்துவிட்டது.

2023 ஆம் ஆண்டு பொங்கல் திருநாள் வரும் ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஜனவரி 16 ஆம் தேதி மாட்டுப் பொங்கல், ஜனவரி 17 ஆம் தேதி காணும் பொங்கலையொட்டித் தொடர்ந்து அரசு விடுமுறை விடப்படுகிறது. 

பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை உள்ளிட்ட நகரங்களில் வேலை செய்வோர் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.

ரயில் பயணத்துக்காக, 120 நாள்களுக்கு முன்னதாகவே ரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு கவுன்ட்டா்கள், ஐஆா்சிடிசி இணையதளம் வழியாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ளலாம்.

ஜனவரி 12 ஆம் தேதி பயணிக்க செப்.14 - புதன்கிழமையும் ஜனவரி 13 ஆம் தேதி பயணிக்க செப். 15 - வியாழக்கிழமையும், பொங்கலுக்கு முந்தைய  நாளான ஜனவரி 14 ஆம் தேதி பயணிக்க  செப். 16- வெள்ளிக்கிழமையும் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம். 

இதன்படி, ஜன. 13 பயணத்துக்காக இன்று காலை 8 மணிக்குத் தொடங்கிய முன்பதிவு, சில நிமிடங்களிலேயே முடிந்துவிட்டது. 

குறிப்பாக, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை உள்ளிட்ட மதுரைக் கோட்டத்தின் கீழ் உள்ள தெற்கு மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களில் சில நிமிடங்களிலேயே டிக்கெட் தீர்ந்துவிட்டன. 

சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டை செல்லும் பொதிகை அதிவிரைவு ரயிலில் அனைத்து டிக்கெட்டுகளும் முடிந்துவிட்டன. அதுபோல கன்னியாகுமரி, நெல்லை, பாண்டியன் அதிவிரைவு ரயில்களிலும் காத்திருப்புப் பட்டியலில்கூட டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாத (Regret) நிலை உள்ளது. 

மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை செல்லும் இதர ரயில்களிலும் காத்திருப்புப் பட்டியல் எண் 200-300க்கும் மேல் உள்ளது.

வேலை காரணமாக சென்னை உள்ளிட்ட நகரங்களில் உள்ளோர் பொங்கல் பண்டிகைக்குச் செல்ல ரயில் டிக்கெட் கிடைக்காமல் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

மேலும், சொந்த ஊரில் இருந்து திரும்பி வருவதற்கு பொங்கல் (ஜன.15) அன்று பயணிக்க செப். 17 ஆம் தேதியும், பொங்கலுக்கு மறுநாளான ஜன. 16 ஆம் தேதி பயணிக்க செப். 18 ஆம் தேதியும், ஜன. 17 ஆம் தேதி பயணிக்க செப். 19 ஆம் தேதியும், ஜன. 18 ஆம் தேதி பயணிக்க செப். 20 ஆம் தேதியும் முன்பதிவு செய்துகொள்ளலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.