சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

பொங்கல்: தெற்கு ரயில்களில் சில நிமிடங்களிலேயே விற்றுத்தீர்ந்த ரயில் டிக்கெட்டுகள்!

பொங்கல் திருநாளுக்குச் செல்வதற்கான ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு இன்று (செப். 15) தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்து, காத்திருப்பு பட்டியலுக்கு வந்துவிட்டது.

News image
Updated On :15 செப்டம்பர் 2022, 1:22 pm IST

பொங்கல் திருநாளுக்குச் செல்வதற்கான ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு இன்று (செப். 15) தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்து, காத்திருப்பு பட்டியலுக்கு வந்துவிட்டது.

2023 ஆம் ஆண்டு பொங்கல் திருநாள் வரும் ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஜனவரி 16 ஆம் தேதி மாட்டுப் பொங்கல், ஜனவரி 17 ஆம் தேதி காணும் பொங்கலையொட்டித் தொடர்ந்து அரசு விடுமுறை விடப்படுகிறது. 

பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை உள்ளிட்ட நகரங்களில் வேலை செய்வோர் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.

ரயில் பயணத்துக்காக, 120 நாள்களுக்கு முன்னதாகவே ரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு கவுன்ட்டா்கள், ஐஆா்சிடிசி இணையதளம் வழியாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ளலாம்.

ஜனவரி 12 ஆம் தேதி பயணிக்க செப்.14 - புதன்கிழமையும் ஜனவரி 13 ஆம் தேதி பயணிக்க செப். 15 - வியாழக்கிழமையும், பொங்கலுக்கு முந்தைய  நாளான ஜனவரி 14 ஆம் தேதி பயணிக்க  செப். 16- வெள்ளிக்கிழமையும் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம். 

இதன்படி, ஜன. 13 பயணத்துக்காக இன்று காலை 8 மணிக்குத் தொடங்கிய முன்பதிவு, சில நிமிடங்களிலேயே முடிந்துவிட்டது. 

குறிப்பாக, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை உள்ளிட்ட மதுரைக் கோட்டத்தின் கீழ் உள்ள தெற்கு மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களில் சில நிமிடங்களிலேயே டிக்கெட் தீர்ந்துவிட்டன. 

சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டை செல்லும் பொதிகை அதிவிரைவு ரயிலில் அனைத்து டிக்கெட்டுகளும் முடிந்துவிட்டன. அதுபோல கன்னியாகுமரி, நெல்லை, பாண்டியன் அதிவிரைவு ரயில்களிலும் காத்திருப்புப் பட்டியலில்கூட டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாத (Regret) நிலை உள்ளது. 

மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை செல்லும் இதர ரயில்களிலும் காத்திருப்புப் பட்டியல் எண் 200-300க்கும் மேல் உள்ளது.

வேலை காரணமாக சென்னை உள்ளிட்ட நகரங்களில் உள்ளோர் பொங்கல் பண்டிகைக்குச் செல்ல ரயில் டிக்கெட் கிடைக்காமல் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

மேலும், சொந்த ஊரில் இருந்து திரும்பி வருவதற்கு பொங்கல் (ஜன.15) அன்று பயணிக்க செப். 17 ஆம் தேதியும், பொங்கலுக்கு மறுநாளான ஜன. 16 ஆம் தேதி பயணிக்க செப். 18 ஆம் தேதியும், ஜன. 17 ஆம் தேதி பயணிக்க செப். 19 ஆம் தேதியும், ஜன. 18 ஆம் தேதி பயணிக்க செப். 20 ஆம் தேதியும் முன்பதிவு செய்துகொள்ளலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.