நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அண்ணா பிறந்தநாள்: 75 ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை

அண்ணாவின் பிறந்தநாளையொட்டி தமிழக சிறைகளில் இருந்து 75 ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

News image
Updated On :24 செப்டம்பர் 2022, 6:04 am

DIN

அண்ணாவின் பிறந்தநாளையொட்டி தமிழக சிறைகளில் இருந்து 75 ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்தநாள் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி தமிழக அரசாலும் திமுகவினராலும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 

இந்நிலையில் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி தமிழகத்தில் 75 ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

புழல் மத்திய சிறையில் இருந்து 13 பேர், வேலூர் மத்திய சிறையில் இருந்து 2 பேர், கடலூர் மத்திய சிறையில் இருந்து 5 பேர், சேலம் மத்திய சிறையில் இருந்து ஒருவர், கோவை மத்திய சிறையில் இருந்து 12 பேர், திருச்சி மத்திய சிறையில் இருந்து 12 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

அதுபோல மதுரை மத்திய சிறையில் இருந்து 22 பேரும் திருச்சி பெண் சிறையில் இருந்து 2 பேரும் புழல் பெண் சிறையில் இருந்து 2 பேரும் புதுக்கோட்டை சிறையில் இருந்து 4 பேரும் என 75 ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.