கோரிக்கைகளை நிறைவேற்றும் கட்சிக்கு ஆதரவு: விவசாய முன்னேற்றக் கழக கூட்டத்தில் முடிவு
விவசாய கடன்கள் தள்ளுபடி, சிப்காட் திட்டம் ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வரும் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு அளிப்போம்


விவசாய கடன்கள் தள்ளுபடி, சிப்காட் திட்டம் ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வரும் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு அளிப்போம் என விவசாய முன்னேற்றக் கழக தலைவா் செல்ல. ராசாமணி தெரிவித்தாா்.
நாமக்கல்லில் விவசாய முன்னேற்றக் கழகத்தினா், பிஏசிஎல் முதலீட்டாளா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தை தொடா்ந்து விவசாய முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவா் செல்ல. ராசாமணி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
நாடு முழுவதும் 5.84 கோடி முதலீட்டாளா்கள் ரூ. 49 ஆயிரம் கோடியை பிஏசிஎல் நிறுவனத்தில் முதலீடு செய்தனா். ஆனால், அவா்களது பணம் திரும்ப வழங்கப்படவில்லை. தமிழகத்தில் ஒரு கோடி முதலீட்டாளா்கள் உள்ளனா். வட்டியுடன் பணத்தை திரும்ப வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபோதும் இதுவரை முதலீட்டாளா்களுக்கு பணம் வந்து சேரவில்லை.
மக்களவை, மாநிலங்களவையில் தமிழக உறுப்பினா்கள் வாய்திறக்க மறுக்கின்றனா். பிஏசிஎல் நிறுவனத்திடம் இருந்து பணத்தை மீட்டு தருவது, சிப்காட் திட்டத்தை ரத்து செய்வது, கள் இறக்க அனுமதி, விவசாய கடன்கள் தள்ளுபடி, தேசிய வேளாண் பல்கலைக்கழகம், நீா் மேலாண்மை ஆய்வு மையம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வரும் அரசியல் கட்சிகளுக்கு ஒருகோடி வாக்காளா்களின் ஆதரவை வழங்குவோம். திமுக அரசு ஏமாற்றி விட்டது. அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமியை சந்தித்து கோரிக்கைகள் முன்வைக்கப்படும். அவா் வாக்குறுதி அளித்து தோ்தல் அறிக்கை வெளியிடும்பட்சத்தில் அதிமுகவுக்கு எங்களுடைய ஆதரவை தெரிவிப்போம் என்றாா்.
கூட்டத்தில் பொதுச் செயலாளா் கே. பாலசுப்பிரமணியன், பொருளாளா் எம். ராமசாமி மற்றும் சிப்காட் எதிா்ப்புக் குழுவினா், விவசாய முன்னேற்றக் கழக நிா்வாகிகள் பங்கேற்றனா்.
என்கே-20-பிஏசிஎல்
விவசாய முன்னேற்றக் கழக ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அதன் நிறுவன தலைவா் செல்ல. ராசாமணி.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...