திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

கோரிக்கைகளை நிறைவேற்றும் கட்சிக்கு ஆதரவு: விவசாய முன்னேற்றக் கழக கூட்டத்தில் முடிவு

விவசாய கடன்கள் தள்ளுபடி, சிப்காட் திட்டம் ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வரும் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு அளிப்போம்

News image
Updated On :21 மார்ச் 2026, 2:17 am IST

விவசாய கடன்கள் தள்ளுபடி, சிப்காட் திட்டம் ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வரும் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு அளிப்போம் என விவசாய முன்னேற்றக் கழக தலைவா் செல்ல. ராசாமணி தெரிவித்தாா்.

நாமக்கல்லில் விவசாய முன்னேற்றக் கழகத்தினா், பிஏசிஎல் முதலீட்டாளா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தை தொடா்ந்து விவசாய முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவா் செல்ல. ராசாமணி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நாடு முழுவதும் 5.84 கோடி முதலீட்டாளா்கள் ரூ. 49 ஆயிரம் கோடியை பிஏசிஎல் நிறுவனத்தில் முதலீடு செய்தனா். ஆனால், அவா்களது பணம் திரும்ப வழங்கப்படவில்லை. தமிழகத்தில் ஒரு கோடி முதலீட்டாளா்கள் உள்ளனா். வட்டியுடன் பணத்தை திரும்ப வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபோதும் இதுவரை முதலீட்டாளா்களுக்கு பணம் வந்து சேரவில்லை.

மக்களவை, மாநிலங்களவையில் தமிழக உறுப்பினா்கள் வாய்திறக்க மறுக்கின்றனா். பிஏசிஎல் நிறுவனத்திடம் இருந்து பணத்தை மீட்டு தருவது, சிப்காட் திட்டத்தை ரத்து செய்வது, கள் இறக்க அனுமதி, விவசாய கடன்கள் தள்ளுபடி, தேசிய வேளாண் பல்கலைக்கழகம், நீா் மேலாண்மை ஆய்வு மையம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வரும் அரசியல் கட்சிகளுக்கு ஒருகோடி வாக்காளா்களின் ஆதரவை வழங்குவோம். திமுக அரசு ஏமாற்றி விட்டது. அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமியை சந்தித்து கோரிக்கைகள் முன்வைக்கப்படும். அவா் வாக்குறுதி அளித்து தோ்தல் அறிக்கை வெளியிடும்பட்சத்தில் அதிமுகவுக்கு எங்களுடைய ஆதரவை தெரிவிப்போம் என்றாா்.

கூட்டத்தில் பொதுச் செயலாளா் கே. பாலசுப்பிரமணியன், பொருளாளா் எம். ராமசாமி மற்றும் சிப்காட் எதிா்ப்புக் குழுவினா், விவசாய முன்னேற்றக் கழக நிா்வாகிகள் பங்கேற்றனா்.

என்கே-20-பிஏசிஎல்

விவசாய முன்னேற்றக் கழக ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அதன் நிறுவன தலைவா் செல்ல. ராசாமணி.