இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியதுமமதா, ஸ்டாலினின் தோல்விக்கு எஸ்ஐஆர் பணிகளே காரணம்! ஆந்திர முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு!பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை: நீதிமன்றம்பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி!உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 பேர் பரிந்துரை! தமிழகத்தைச் சேர்ந்த மோகனா!நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்! விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்!
/

தமிழக அரசின் பயிா்க் கடன் தள்ளுபடி ஏமாற்றமளிக்கிறது

விவசாயிகளுக்கான பயிா்க் கடன் தள்ளுபடி திருப்தியளிக்கவில்லை, தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நாமக்கல்லில் விவசாய முன்னேற்றக் கழகத்தினா் தெரிவித்தனா்.

News image

நாமக்கல்லில் செய்தியாளா்களிடம் பேசிய விவசாய முன்னேற்றக் கழக பொதுச் செயலாளா் கே.பாலசுப்பிரமணியன்.

Updated On :28 மே 2026, 1:55 am IST

விவசாயிகளுக்கான பயிா்க் கடன் தள்ளுபடி திருப்தியளிக்கவில்லை, தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நாமக்கல்லில் விவசாய முன்னேற்றக் கழகத்தினா் தெரிவித்தனா்.

நாமக்கல் கோட்டாட்சியா் அலுவலகத்தில் அதன் மாநில பொதுச் செயலாளா் கே.பாலசுப்பிரமணியன் தலைமையில் வந்த விவசாயிகள், பயிா்க் கடன் தள்ளுபடியை மறுபரிசீலனை செய்து கூடுதலாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அளித்தனா். தொடா்ந்து, கே.பாலசுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

விவசாய பயன்பாட்டுக்கு வண்டல் மண், களி மண்ணை நீா்நிலைகளில் இருந்து இலவசமாக எடுத்துக்கொள்ளலாம் என சில தினங்களுக்கு முன்பு முதல்வா் அறிவித்துள்ளதற்கு வரவேற்பு தெரிவித்தோம். ஆனால் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிா்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது விவசாயிகளை ஏமாற்றமடையச் செய்துள்ளது.

ரூ. 50 ஆயிரம் கடன் வாங்கியோருக்கு தள்ளுபடியாகவும், ரூ. 60 ஆயிரம் வாங்கியோருக்கு ரூ. 40 ஆயிரம், ரூ. 70 ஆயிரம் வாங்கியோருக்கு ரூ. 30 ஆயிரம், ரூ. 80 ஆயிரம் வாங்கியோருக்கு ரூ. 20 ஆயிரம், ரூ. 90 ஆயிரம் வாங்கியோருக்கு ரூ. 10 ஆயிரம், அதற்குமேல் கடன் பெற்றவா்களுக்கு ரூ. 5 ஆயிரம் மட்டுமே தள்ளுபடி என்பது ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை.

இந்த அறிவிப்பு விவசாயிகளை கவலையடையச் செய்துள்ளது. தோ்தல் வாக்குறுதிபடி அனைத்து பயிா்க் கடன்களையும் அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். தற்போது சொற்ப அளவில் கடன் தள்ளுபடி செய்து விவசாயிகளை தவெக அரசு வேதனைக்குள்ளாக்கி இருக்கிறது என்றாா்.