பாஜகவினரின் வீடுகளில் தொடரும் தாக்குதல்: ஆர்எஸ்எஸ் நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

தமிழகத்தில் பாஜகவினரின் வீடுகளில் தொடர்ந்து 2- ஆவது நாளாக மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி வருகிறார். பல்வேறு பகுதிகளில் பாஜகவினரின் வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன. 
பாஜகவினரின் வீடுகளில் தொடரும் தாக்குதல்: ஆர்எஸ்எஸ் நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

தமிழகத்தில் பாஜகவினரின் வீடுகளில் தொடர்ந்து 2- ஆவது நாளாக மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி வருகிறார். பல்வேறு பகுதிகளில் பாஜகவினரின் வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன. 

நேற்று கோவை பாஜக அலுவலகத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இதுகுறித்து விசாரிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் இன்று, சென்னை தாம்பரம் அருகே சிட்லபாக்கம் ராஜராஜேஸ்வரி நகரில் ஆர்எஸ்எஸ் அமைப்பு தலைவர் சீதாராமன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

மர்ம நபர்கள் இருவர் வாகனத்தில் வந்து பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்றுள்ளனர். சிட்லபாக்கம் காவல் துறையினர் அவர்களைத் தேடி

அதுபோல, திண்டுக்கல் மாவட்டம் குடைபாறைப்பட்டியில் பாஜக மேற்கு நகர தலைவர் செந்தில் பால்ராஜின் கார் செட்டுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். 

ஈரோடு சத்தியமங்கலம் அருகே புஞ்சைப் புளியம்பட்டியில் பாஜக பிரமுகர் சிவசேகரின் காரை மர்ம நபர் தீ வைத்து எரித்துள்ளனர். 

இதுபோல ராமநாதபுரம் திண்டுக்களிலும் பாஜக நிர்வாகிகளின் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

பாஜக நிர்வாகிகளின் வீடு மற்றும் வாகனங்களின் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com