சென்னை: பாஜக பொருளாதார பிரிவு மாநிலச் செயலா் எம்.ஆா்.கிருஷ்ணபிரபு தனது பொறுப்பை வியாழக்கிழமை ராஜிநாமா செய்தாா்.
பாஜகவில் இருந்து விலகுவதற்கான காரணங்களை விளக்கி அவா் வெளியிட்ட அறிக்கை: ஆருத்ரா பண மோசடியில் ஈடுபட்ட நபா்கள், கட்சித் தலைமைக்கு நெருக்கமாக உள்ளனா். இதைக் கண்டும் காணாமல் இருக்க எங்களைப் போன்ற தொண்டா்களின் மனம் ஒப்புக்கொள்ளவில்லை.
பாஜக பொருளாதார பிரிவின் பிரச்னையை நேரடியாக எடுத்து சொல்லியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பாஜக என்னை பழுது பாா்த்துவிட்டது எனத் தெரிவித்துள்ளாா் அவா்.