பஞ்சாபில் தமிழக ராணூவ வீரர்கள் 2 பேரும் எப்படி இறந்தனர் என காரணம் கேட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சேலம் மேட்டூர் அருகே இறந்த ராணூவ வீரர் கமலேஷ் சடலுடத்துடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். சொந்த ஊரான வனவாசிக்கு கொண்டுவரப்பட்ட ராணுவ வீரரின் சடலடத்துடன் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மற்றொரு ராணுவ வீரர் யோகேஷ் குமாரின் சொந்த ஊரான தேனி தேவாரம் அருகே மூனாண்பட்டியிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க: அம்பேத்கர் பிறந்த நாள்: ராமதாஸ் மாலை அணிவித்து மரியாதை
பஞ்சாப் மாநிலம் பதிண்டா நகரத்தில் உள்ள ராணுவ தளத்தில் இரு தினங்களுக்கு முன் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 4 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.