ஏப்.24-இல் மதுரை - குஜராத் சிறப்பு ரயில் இயக்கம்

சௌராஷ்ரா தமிழ் சங்கமத்தை முன்னிட்டு, மதுரையிலிருந்து குஜராத்துக்கு ஏப்.24-ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சௌராஷ்ரா தமிழ் சங்கமத்தை முன்னிட்டு, மதுரையிலிருந்து குஜராத்துக்கு ஏப்.24-ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சௌராஷ்ரா தமிழ் சங்கமத்தின் 11-ஆவது பயணமாக மதுரையிலிருந்து குஜராத்துக்கு ஏப்.24- ஆம் தேதி சிறப்பு ரயில் (வண்டி ஏண்: 06301) இயக்கப்படுகிறது.

மதுரையில் இருந்து மாலை 5.40 மணிக்கு புறப்படும் ரயில் ஏப்.28 -ஆம் தேதி காலை 9 மணிக்கு குஜராத் மாநிலம் வெரவல் சென்றடையும்.

இந்த ரயிலில் 10 குளிா்சாதன பெட்டிகள், 2 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 4 பொது வகுப்பு பெட்டிகள் உள்ளன.

இந்த ரயில் மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், தாம்பரம் , சென்னை எழும்பூா், ஆந்திரம், மகாராஷ்டிரம் வழியாக குஜராத் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com