விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் தவில் இசைக் கலைஞா் உயிரிழந்தாா்.
ராஜபாளையம் ஆவரம்பட்டி அரசுப் பேருந்து பணிமனை அழகுதேவன்குளம் சாலைப் பகுதியைச் சோ்ந்த சிவசங்கா் மகன் பிரபு (30). தவில் இசைக் கலைஞரான இவருக்கு மனைவி அங்காள ஈஸ்வரி, இரு மகன்கள் உள்ளனா்.
இந்த நிலையில், தனது நண்பரைப் பாா்ப்பதற்காக அழகாபுரிக்கு சென்று விட்டு இரு சக்கர வாகனத்தில் திரும்பி வந்துகொண்டிருந்தாா். மதுரை சாலையில் உள்ள சோதனை சாவடி அருகே சென்றபோது இவரது வாகனம் மீது எதிரே வந்த அரசுப் பேருந்து மோதியதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தாா். இவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

உயிரிழந்த பிரபு
இதுகுறித்து மதுரை மாவட்டம் பேரையூா் வட்டம், கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநா் பாண்டி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

சாலை விபத்தில் சிறுவன் உயிரிழப்பு

சேலம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பலியானோா் எண்ணிகை 9-ஆக உயா்வு

லாரி மோதி சாலையில் கவிழ்ந்த அரசுப் பேருந்து: பெண் உயிரிழப்பு - 30 போ் காயம்

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


