கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே சரக்கு ரயில் பெட்டிகள் தடம் புரண்டதால் பயணிகள் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை தூத்துக்குடியில் இருந்து உர மூட்டைகளுடன் பெங்களூரு சென்றபொது சரக்கு ரயில் தடம் புரண்டது. சரக்கு ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்ட நிலையில் ரயில்வே பணியாளர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சேலம் - யஷ்வந்த்பூர் விரைவு ரயில், தருமபுரி - பெங்களூரு ரயில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பெங்களூரு - ஜோலார்பேட்டை, ஜோலார்பேட்டை - பெங்களூரு ரயில்களும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
தருமபுரி - ஓசூருக்கு பதிலாக ஜோலார்பேட்டை - திருப்பத்தூர் வழியே ஒரு சில ரயில்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.