அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்
/

மன்னார்குடி அருகே பொதுமக்கள் சார்பில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்!

மன்னார்குடி அருகே புதிய வட்டத்துடன் 4 ஊராட்சிகளை இணைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் சார்பில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது.

News image

உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள பொதுமக்கள்.

Updated On :25 ஏப்ரல் 2023, 1:06 pm IST

மன்னார்குடி அருகே புதிய வட்டத்துடன் 4 ஊராட்சிகளை இணைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் சார்பில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கோட்டூர் ஒன்றியத்திற்கு உள்பட்ட களப்பால், குறிச்சிமூலை, வெங்கத்தான்குடி, குலமாணிக்கம் ஆகிய நான்கு ஊராட்சிகளை புதிதாக தொடக்கப்பட்ட முத்துப்பேட்டை வருவாய் வட்டத்துன் இணைக்கப்பட்டதை கண்டித்து செவ்வாய்க்கிழமை தொடர் உண்ணாவிரதப் போராட்டம் பொதுமக்கள் சார்பில் நடைபெற்று வருகிறது.

இந்த நான்கு ஊராட்சிகளும் இதுநாள் வரை மன்னார்குடி வருவாய் வட்டத்துடன இணைந்து இருந்தது. அண்மையில், முத்துப்பேட்டையை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் வட்டம் தொடங்கப்பட்டதை அடுத்து இந்த நான்கு ஊராட்சிகளும் புதிய வட்டத்துடன் இணைக்கப்பட்டது.

உண்ணாவிரதப் போராட்டத்துக்கு வர்த்தக சங்கம் ஆதரவு தெரிவித்து  களப்பாலில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.

உண்ணாவிரதப் போராட்டத்துக்கு வர்த்தக சங்கம் ஆதரவு தெரிவித்து  களப்பாலில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.

இதற்கு, ஆரம்பம் முதலே இந்த நான்கு ஊராட்சிகளை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததுடன், அரசுத்துறை அலுவலர்கள் முன்னிலையில் நடைபெற்ற கருத்துகேட்பு கூட்டத்திலும் எதிர்ப்பு தெரிவித்துடன், முத்துப்பேட்டை வருவாய் வட்டத்துடன் ஊராட்சிகளை இணைக்கக் கூடாது என அந்தஅந்த ஊராட்சி கூட்டத்தலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்த நிலையில்,  இது குறித்து மாவட்ட நிர்வாகம் எந்த முடிவும் எடுக்காமல் இருந்த நிலையில் களப்பால், குறிச்சிமூலை, வெங்கத்தான்குடி, குலமாணிக்கம் ஆகிய நான்கு ஊராட்சிகளை உள்ளடக்கி முத்துப்பேட்டை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் வட்டம் தொடங்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த நான்கு ஊராட்சிகளை மன்னார்குடி வருவாய் வட்டத்துடன் இணைந்து இருக்க வேண்டம் அல்லது திருத்துறைப்பூண்டி வருவாய் வட்டத்துன் இணைக்க வேண்டும். எக்காரணத்தை கொண்டும் முத்துப்பேட்டை வருவாய் வட்டத்தில் சேர்க்கக கூடாது என வலியுறுத்தி களப்பால் கடைவீதியில் நான்கு ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள், வர்த்தகர்கள் இணைந்து தொடர் உண்ணாவிரதப் போராட்டம் ஊராட்சி தலைவர்கள் பா.சுஜாதா(களப்பால்), கே.எம்.அறிவுடைநம்பி(குறிச்சிமூலை), சி.திலகவதி(வெங்கத்தான்குடி), கு.புவனேஸ்வரி (குலமாணிக்கம்) ஆகியோர் தலைமையில் தொடங்கியது.

போராட்டக்குழுத் தலைவர் ஏ.கே.ஜி.சிவராமன் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி வைத்தார். செயலர் கே.முரளிதாஸ், பொருளாளர் வி.சிவசாமி முன்னிலை வகித்தனர்.

இதில், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பா.சாந்தி, ம.சாந்தி, வி.மாரியப்பன், வர்த்தக சங்க மாவட்ட துணைச் செயலர் தங்க.முத்துவேல் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துகொண்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நான்கு ஊராட்சி பகுதிகளிலும் உள்ள கடைகள் அடைக்கப்பட்டு வர்த்தகர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.