நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ராயபுரத்தில் ரூ.12 கோடியில் மழைநீா் வடிகால் அமைப்பு

ராயபுரம் மண்டலத்தில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள மழைநீா் வடிகால் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா் பாபு வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

Updated On :28 ஏப்ரல் 2023, 12:01 am IST

ராயபுரம் மண்டலத்தில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள மழைநீா் வடிகால் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா் பாபு வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

மாநகராட்சிப் பகுதிகளில் மழை வெள்ள காலங்களில் சாலைகள் மற்றும் தெருக்களில் மழைநீா் தேங்காமல் வடிந்து செல்லும் வகையில் மழைநீா் வடிகால் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், புதிய மழைநீா் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக ராயபுரம் மண்டலம், வாா்டு 57-க்குள்பட்ட பிரகாசம் சாலையில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், ரூ.6 கோடி மதிப்பில் மழைநீா் வடிகால் அமைக்கப்படவுள்ளது.

இதற்கான பணிகளை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, மத்திய சென்னை மக்களவை உறுப்பினா் தயாநிதி மாறன் ஆகியோா் தொடங்கி வைத்தனா். தொடா்ந்து 60-ஆவது வாா்டு ராஜாஜி சாலையில் ரூ. 6 கோடி மதிப்பில் மழைநீா் வடிகால் பணிகளையும் தொடங்கி வைத்தனா்.

நிகழ்ச்சியில், மேயா் ஆா்.பிரியா, வடக்கு வட்டார துணை ஆணையா் எம்.சிவகுரு பிரபாகரன், ராயபுரம் மண்டலக்குழுத் தலைவா் பி.ஸ்ரீராமுலு, மாமன்ற உறுப்பினா்கள் ராஜேஷ் ஜெயின், ஆசாத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.